ஆல்பி மார்கல் என்ற பெயரை தெரியாத கிரிக்கெட் ரசிகர்கள் கிடையாது. தென் ஆப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டரான மார்க்கல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர்.
பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் எதிரணியிரை கலங்கடிக்கும் திறமையுள்ள மார்க்கல் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொசாம்பிக் நாட்டில் ஆயுதம் கடத்திய குற்றத்துக்காக இரண்டு நாட்கள் சிறையில் இருந்ததாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
மொசாம்பிக்கில் காட்டுக்குள் சென்று வேட்டையாடிவிட்டு திரும்பிய மார்க்கல், தன் காரை சுத்தம் செய்ய கூறி தன்னுடைய தோட்டக்காரரிடம் கூறியுள்ளார். அப்போது காருக்குள் துப்பாக்கி குண்டுகள் இருப்பதை பார்த்த தோட்டக்காரர் அதை என்ன செய்வதென்று தெரியாமல் மார்க்கலின் கிரிக்கெட் பை ஒன்றில் வைத்துள்ளார். இதை அறியாத மார்க்கல் அந்த பையை எடுத்துகொண்டு விமான நிலையத்துக்கு சென்றுள்ளார்.
விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்த போது உள்ளே துப்பாக்கி குண்டுகள் இருந்ததையடுத்து மார்க்கலை பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். இரண்டு நாள் கழித்து மார்க்கலுடைய நண்பர்கள் அவரை வெளியில் எடுத்துள்ளனர். “என் வாழ்வில் மிக மோசமான 2 நாட்கள் அதுதான்” என மார்க்கல் தெரிவித்துள்ளார்.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…