இறுதியாக 19.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை 211 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் 7-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.
சென்னை அணியின் தொடக்க வீரராக ராபின் உத்தப்பா, ருதுராஜ் இருவரும் களமிறங்கினர். ருதுராஜ் ஒரு ரன் எடுத்து ரன் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் மொயின் அலி களமிறங்கினார். தொடக்க வீரராக களம் இறங்கி ராபின் உத்தப்பா 27 பந்துகளில் அரை சதம் விளாசினார். அதில் 8 பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும்.
பின்னர் களமிறங்கிய மொயின் அலி 35 ,அம்பதி ராயுடு 27 , ஷிவம் துபே 49 ரன்கள் குவித்தனர். இதனால், சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்தனர். லக்னோவில் ரவி பிஷ்னாய், அவேஷ் கான், ஆண்ட்ரூ டை 2 தலா ஒரு விக்கெட்டை பறித்தனர். 211 ரன்கள் இலக்குடன் லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் குவின்டன் டி காக் இருவரும்களமிறங்கினர்.
இருவரும் தொடக்கத்திலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இருவரும் கூட்டணியில் 99 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய கே.எல் ராகுல் அம்பத்தி ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து 40 ரன்னில் வெளியேறினார். பின்னர் மனிஷ் பாண்டே வந்த வேகத்தில் 5 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடி வந்த குவின்டன் டி காக் அரை சதம் விளாசி 61 ரன்கள் எடுத்து தோனியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த தீபக் ஹூடா 13 ரன்னில் விக்கெட்டை இழந்தார். எவின் லூயிஸ் அதிரடியாக விளையாடிய லக்னோ அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். கடைசிவரை களத்தில் நின்று எவின் லூயிஸ் 55* ரன்கள் குவித்தார். இறுதியாக 19.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை 211 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி விளையாடிய இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது. லக்னோ அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வியை ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது.
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…
சென்னை : இன்று (மார்ச் 10 ) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த…
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…