இங்கிலாந்து மகளிர் அணியின் பேட்டர் சார்லோட் டீன், 72 முறை நான்-ஸ்ட்ரைக்கர் திசையில் தனது கிரீஸை விட்டு வெளியேறினார் என்று தீப்தி ஷர்மா கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணி மோதிய 3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 3-0 என தொடரை வென்றது. 3 ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் சார்லோட் டீன் ஐ, தீப்தி ஷர்மா 44ஆவது ஓவரில் “மன்கட்” முறையில் ரன்அவுட் செய்தார்.
“மன்கட்” முறை கிரிக்கெட்டின் விதிகளில் இருந்தாலும், இது விளையாட்டின் அறத்தை உடைப்பதாகக் கூறி சர்ச்சையைக் கிளப்பியது. இது குறித்து தீப்தி ஷர்மா பேசும்போது சார்லோட் டீன், 72 முறை நான்-ஸ்ட்ரைக்கர் திசையில் தனது கிரீஸை விட்டு வெளியேறினார். 73 வது முறை வெளியேறும் போது நான் ரன்அவுட் செய்ததாகக் கூறினார்.
இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் இது குறித்து பேசும் போது, சார்லோட் டீன் ஐ, “மன்கட்” முறையில் தீப்தி ஷர்மா ரன்அவுட் செய்வதற்கு முன் பலமுறை எச்சரித்துள்ளதாக கூறுவது பொய் என்று கூறியுள்ளார். எந்த எச்சரிக்கையும் தரவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியா “மன்கட்” ரன்அவுட் முறையில் உறுதியாக இருந்ததாகவும், எச்சரித்ததாக பொய் சொல்லி அதை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…