ஐ.சி.சி 50 ஓவர் மற்றும் டி-20 உலகக் கோப்பை போட்டிகளில் மாற்றம் – ஐ.சி.சி அறிவிப்பு..!

Published by
Edison

ஐ.சி.சி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியை 14 அணிகளுக்கு விரிவுபடுத்துவதாகவும் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை  டி-20 உலக கோப்பை போட்டிகள் நடத்தப்படும் என்றும் இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வாரியம் அறிவித்துள்ளது.

பொதுவாக ஐ.சி.சி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியானது 10 அணிகளுக்கிடையே நடைபெறும்.அதைப்போன்று,டி 20 உலகக் கோப்பை போட்டியானது 16 அணிகளுக்கிடையே நடைபெறும்.

இந்நிலையில்,ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஆண்கள் டி 20 உலகக் கோப்பை விரிவாக்கப்பட வேண்டும் மற்றும் ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.சி.சி நிர்வாகம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.பின்னர்,ஐ.சி.சி நிகழ்வுகளின் 2024-2031 ஆம் ஆண்டிற்கான அட்டவணையை ஐ.சி.சி வாரியம் இன்று உறுதிப்படுத்தியது.

அதன்படி,டி-20 உலக கோப்பை போட்டியை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவது என்றும், 2024, 2026, 2028, 2030 ஆகிய ஆண்டுகளில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் அணிகளின் எண்ணிக்கையை 16 இல் இருந்து 20 ஆக உயர்த்துவது என்றும்,அதைப் போன்று 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் அணிகளின் எண்ணிக்கையை 10 இல் இருந்து 14 ஆக உயர்த்துவதாகவும் ஐ.சி.சி வாரியம் அறிவித்துள்ளது.

மேலும்,2024 ஆம் ஆண்டில் இருந்து 2031 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்குள்,தரவரிசையின் அடிப்படியில் டாப் 8 அணிகள் மட்டும் பங்கேற்கும் ஐ.சி.சி. உலக கோப்பை போட்டியை 2 முறையும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிசுற்றை 4 முறையும் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Published by
Edison

Recent Posts

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

30 minutes ago

அன்னா கிராம்லிங்க்கு செக்! கண்ணை மூடி கொண்டு வீழ்த்தி அசத்திய மேக்னஸ் கார்ல்சன்!

ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…

51 minutes ago

கொல்கத்தாவுக்கு பயத்தை காட்டிய பூரன்! லக்னோ வைத்த பெரிய இலக்கு!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…

2 hours ago

ஒண்ணும் தெரியாம விஜய் பேச வேண்டாம்! பதிலடி கொடுத்த தமிழிசை சௌந்தரராஜன்!

சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…

2 hours ago

பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…

2 hours ago

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…

3 hours ago