உலகக்கோப்பையில் வேதனையுடன் சாதனையை படைத்த கேப்டன் கேன் வில்லியம்சன்!

Published by
murugan

நேற்று நடந்த  இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது .இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி  பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை  இழந்து 241 ரன்கள் குவித்தனர். பின்னர் 242 ரன்கள் இலக்குடன் களமிங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 241 ரன்கள் அடித்தனர்.அதனால் போட்டி டையில் முடிந்தது.

பின்னர் இரு அணிகளுக்கும் சூப்பர் நடத்தப்பட்டது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 6 பந்தில் 15 ரன்கள் குவித்தனர்.பின்னர் 16 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 6 பந்தில் 15 ரன்கள் அடித்ததன் மூலம் மீண்டும் போட்டி டை ஆனது.

பின்னர்  இறுதி போட்டியில் அதிக பவுண்டரி அடித்த அணிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் முதல் முறையாக உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து  அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த என்ற சாதனையை கேப்டன் கேன் வில்லியம்சன் படைத்தது உள்ளார்.நடப்பு உலகக்கோப்பையில் கேன் வில்லியம்சன் 10 போட்டிகளில் விளையாடி 578 ரன்கள் குவித்தார்.

இதற்கு முன் 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் இலங்கை அணி கேப்டன் ஜெய வர்த்தனே 548 ரன்கள் அடித்து இருந்தார்.அதுவே உலகக்கோப்பை தொடரில் கேப்டன்களில் அடித்த அதிக ரன்னாக இருந்தது. தற்போது அந்த சாதனையை கேப்டன் கேன் வில்லியம்சன் முறியடித்து உள்ளார்.

Published by
murugan

Recent Posts

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

16 mins ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

41 mins ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

1 hour ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

1 hour ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

1 hour ago

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

2 hours ago