இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

Published by
அகில் R

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது.

தற்போதைய பிசிசிஐ கட்டண முறைப்படி, 40-க்கும் மேற்பட்ட ரஞ்சி போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு ஒரு நாளைக்கு ஊதியமாக  ரூ.60,000 ரூபாயும், 21 முதல் 40 போட்டிகளில் விளையாடுபவர்களுக்கு ஊதியமாக ரூ.50,000 ரூபாயும், வெறும் 20 ஆட்டங்களில் விளையாடியவர்களுக்கு ரூ.40,000 ரூபாயும் பிசிசிஐ வழங்குகிறது. மேலும், மாற்று வீரர்களாக இருப்பவர்களுக்கு ரூ.30,000, ரூ.25,000 மற்றும் ரூ.20,000 வரை பிசிசிஐ வழங்குகிறது.

இதன் அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தல் ஒரு சீனியர் வீரரின் அணி ஒரு வேளை இறுதிப் போட்டியை எட்டினால் அவர்களுக்கு ரூ.25 லட்சம் வரை சம்பாதிக்கலாம் எனவும் அணியில் இருக்கும் மற்ற வீரர்கள் ரூ.17 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிகிறது.  மேலும், விளையாடும் வீரர்கள் விஜய் ஹசாரே மற்றும் முஷ்டாக் அலி போன்ற உள்நாட்டு தொடர்களிலிருந்தும் இன்னும் அதிக வருவாயைப் பெறுவார்கள். இதனால் உள்நாட்டில் சிறப்பா கிரிக்கெட் மட்டும் விளையாடும் ஒரு வீரர் கூட ரூ.கோடி வரை சம்பாதிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனால் விளையாடும் வீரர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வாய்ப்புகள் மிக அதிகம் என வெளியான தகவல்கள் மூலம் க்ரிக்பஸ்ஸின் அறிக்கையில் தெரிகிறது. இது போன்ற திட்டங்களின் நோக்கம் என்னவென்றால் இந்திய நாட்டின் முதன்மையான உள்நாட்டுப் தொடரான ரஞ்சி கோப்பையில் பங்கேற்க வீரர்களை தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் சில நோக்கத்துடன் பிசிசிஐ இந்த யோசனை எடுத்துள்ளது என்று தெரிகிறது என்று க்ரிக்பஸ் வலைத்தளம் அறிக்கையில் அறிவித்துள்ளது.

இதற்கு முன் பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா, டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் போட்டி ஊதியத்தை உயர்த்தி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கான கட்டணத்தை இரட்டிப்பாக்க அல்லது மூன்று மடங்காக உயர்த்த பரிந்துரை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

53 minutes ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

1 hour ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

2 hours ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

13 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

13 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

15 hours ago