பை பை ஆஸி. ! த்ரில் வெற்றியை பெற்று அரை இறுதிக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான்!

Published by
அகில் R

டி20I சூப்பர் 8: நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் அணியும், வங்கதேச அணியும் செயின்ட் வின்சென்ட்டில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் வைத்து மோதியது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதன் காரணமாக அதிரடியாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குர்பாஸ் மட்டும் தனி ஆளாக நின்று 43 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அவரை தொடர்ந்து நிலையாக எந்த ஒரு வீரரும் விளையாடமால் அதிர்ச்சியளித்தனர். இதன் காரணமாக 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 2-வது இன்னிங்ஸ் தொடங்கும்  முன்பே பல கணித முறைகள் வகுக்கப்பட்டது.

அதில், இந்த இலக்கை 12.1 ஓவர்களில் எட்டினால் வங்கதேச அணி அரை இறுதிக்கு தகுதி பெறுவார்கள் என்றும் 12.1 ஓவர்களை தாண்டி வங்கதேச அணி வெற்றி பெற்றார்கள் என்றால் ஆஸ்திரேலியா அணி அரை இறுதிக்கு தகுதி பெறுவார்கள் என்றும் போட்டியை வென்றால் ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு செல்வார்கள் என்றும் விறுவிறுப்பாகவே தொடங்கியது.

அதன்பிறகு வங்கதேச அணி பேட்டிங் களமிறங்கி விளையாடியது, தொடக்கம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடி வந்த வங்கதேச அணி விக்கெட்டுகளையும் இழந்து மோசமான நிலையில் இருந்தனர்.

மேலும், ரஷீத் கானின் அபாரமான பந்து வீச்சால் வங்கதேச அணி நிலை குழைந்து போனது. மேலும், மழை அவ்வப்போது குறிக்கிட்டதன் காரணமாக 1 ஓவர்கள் குறைக்கப்பட்டு இலக்கும் 114 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து 9 பந்துக்கு 9 ரன்கள் இருந்த நிலையில் 2 விக்கெட்டுகள் கையில் இருந்த நிலையில் அடுத்தடுத்து அந்த 2 விக்கெட்டையும் இழந்து 10 விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேச அணி. இதன் மூலம்  8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியின் இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடரிலிருருந்து வெளியேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, வரும் ஜூன்-26ம் தேதி தென்னாபிரிக்கா அணியும்,   அணியும் முதல் அரை இறுதி போட்டியிலும், ஜூன்-27ம் தேதி இந்தியா அணியும், இங்கிலாந்து அணியும் 2-ம் அரை இறுதி போட்டியிலும் விளையாடவுள்ளனர்.

Published by
அகில் R

Recent Posts

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

53 minutes ago

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

1 hour ago

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…

2 hours ago

பாகிஸ்தான் அதிகாரியின் ‘கழுத்தறுப்பு’ சைகையால் வெடித்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ…

லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

3 hours ago

திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…

4 hours ago

Live : தவெக பூத் கமிட்டி மாநாடு முதல்… இந்தியா – பாகிஸ்தான் எல்லை பதற்றம் வரை…

சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…

4 hours ago