ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மன் டேவிட் வார்னர் ‘ராமுலோ ராமுலா’ என்ற பாடலுக்கு குடும்பத்துடன் நடனமாடி டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியிருக்கும் சூழல் நிலவியுள்ளது. மேலும், வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில், திரைப்பிரபலங்கள் தவிர்த்து கிரிக்கெட் வீரர்களும் சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மன் டேவிட் வார்னர், கொரோனா ஊரடங்கை குடும்பத்துடன் டிக்டாக் செய்து சந்தோசமாக இருந்து வருகிறார். இவர், தெலுங்கு பாடலான ‘புட்டபொம்மா’ பாடலுக்கு நடனமாடி டிக்டாக் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. பின்னர் இளையராஜாவின் ‘இஞ்சி இடுப்பழகி’ பாடலுக்கு குடும்பத்துடன் டிக்டாக் வீடியோ வெளியிட்டுருந்தார்.
தற்போது வார்னர் மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது, தெலுங்கு படமான அலா வைகுந்தபுரமுலோ படத்தில் இருந்து ‘புட்டபொம்மா’ பாடலை தொடர்ந்து ‘ராமுலோ ராமுலா’ என்ற பாடலுக்கு குடும்பத்துடன் நடனமாடி டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது. இதனிடையே இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் ‘ஒட்டகத்த கட்டிக்கோ’ என்ற பாடலுக்கு நடனமாடி டிக்டாக் வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…