இன்று பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அணிக்கு ஜோஸ் பட்லர் திரும்ப உள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று ஒருநாள் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஒயிட் வாஸ் செய்து இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று 2வது டி20 போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் காயத்தில் இருந்து மீண்ட பட்லர் களமிறங்குவார் என கூறப்படுகிறது. இங்கிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் கடந்த மாதம் இலங்கைக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஜோஸ் பட்லர் இன்று பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் அணிக்கு திரும்ப உள்ளார். பட்லருக்கு அனுபவம் உண்டு, அவர் வரிசையில் என்ன செய்ய முடியும் என்பதை நாம் அனைவரும் அறிவோம் என்று இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பால் கோலிங்வுட் கூறினார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…