கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்த இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் ப்ராடுக்கு, யுவராஜ் சிங் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட், நடந்து வரும் ஆஷஸ் தொடருடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். ஆஷஸ் தொடரின் 5-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவரும் நிலையில் இது தான் தனக்கு கடைசி போட்டி என பிராட் அறிவித்துள்ளார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ப்ராடுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங், பிராட் வீசிய ஓவரில் 6 பந்துகளிலும் சிக்ஸர் அடித்து உலக சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிராட் ஓய்வு குறித்து, உங்களது கிரிக்கெட் பயணம் அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும் ஒன்று.
கிரிக்கெட்டில் நீங்கள் சாதித்தது நிறைய, நீங்கள் உண்மையான லெஜன்ட். டெஸ்ட் போட்டிகளில் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் சிறந்த பவுலராக இருந்திருக்கிறீர்கள். வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு எனது வாழ்த்துகள் என யுவராஜ் சிங் ட்வீட் செய்துள்ளார்.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…