ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2021-ஆம் ஆண்டிற்கான 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் போட்டி சென்னையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு இடையே நடைபெறுகிறது என தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 56 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி, சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரில் தலா 10 போட்டிகளும், அகமதாபாத் மற்றும் டெல்லியில் தலா 8 போட்டிகளும் நடைபெறவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிளேஆஃப் சுற்றுகளும், மே 30-ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறயுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்களது சொந்த ஸ்டேடியத்தில் விளையாடாமல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணையும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 10-ஆம் தேதி சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைத்தனத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…