விஜய் ஹசாரே கோப்பை இறுதிப் போட்டியில் VJD முறையில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இமாச்சல பிரதேச அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி ஜெய்ப்பூரில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய தமிழக அணி 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் கூட்டணி அமைத்த தினேஷ் கார்த்திக், இந்தரஜித் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கை உயர்த்தினர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது.
இதில், தினேஷ் கார்த்திக் 116, இந்தரஜித் 80 ரன்கள் குவித்தனர். இறுதியாக தமிழக அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 314 ரன்கள் எடுத்தனர். ஹிமாச்சல பிரதேச அணியின் பந்துவீச்சில் ஜெய்ண்வால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய இமாச்சல பிரதேச அணி VJD முறையில் 47.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 299 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இமாச்சல பிரதேச அணியின் தொடக்க வீரர் சுபம் அரோரா 136* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். 5 முறை சாம்பியனான தமிழக அணியை வீழ்த்தி இமாச்சல பிரதேசம் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…