விஜய் ஹசாரே கோப்பை இறுதிப் போட்டியில் VJD முறையில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இமாச்சல பிரதேச அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி ஜெய்ப்பூரில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய தமிழக அணி 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் கூட்டணி அமைத்த தினேஷ் கார்த்திக், இந்தரஜித் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கை உயர்த்தினர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது.
இதில், தினேஷ் கார்த்திக் 116, இந்தரஜித் 80 ரன்கள் குவித்தனர். இறுதியாக தமிழக அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 314 ரன்கள் எடுத்தனர். ஹிமாச்சல பிரதேச அணியின் பந்துவீச்சில் ஜெய்ண்வால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய இமாச்சல பிரதேச அணி VJD முறையில் 47.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 299 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இமாச்சல பிரதேச அணியின் தொடக்க வீரர் சுபம் அரோரா 136* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். 5 முறை சாம்பியனான தமிழக அணியை வீழ்த்தி இமாச்சல பிரதேசம் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…