#BREAKING: ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சஹார் விலகல் – சென்னை அணி அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சஹார் விலகுவதாக அணி நிர்வாகம் அறிவிப்பு.

ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சஹார் விலகுவதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதுகுவலி பிரச்சனை காரணமாக தீபக் சஹார் விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

எங்களின் முக்கிய பந்துவீச்சாளர்கள் எங்களிடம் இல்லாததால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். ஆனால் காயங்கள் ஆட்டத்தின் ஒரு பகுதியாகும். தீபக் சஹார் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

சாஹர் 2018 முதல் சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருந்து நான்கு சீசன்களில் 58 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் வீரர்களின் 2022 சீசனுக்கான மெகா ஏலத்தில் ரூ.14 கோடிக்கு சென்னை மீண்டும் வாங்கியது. காயம் காரணமாக தீபக் சஹார் விலகிய நிலையில், இவருக்கு பதில் மாற்று வீரர் யார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுதொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

17 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago