Morne Morkel - Gautam Gambhir [file image]
சென்னை : கம்பீர் ஆசைப் பட்டத்தை போல, இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரான மோர்னே மோர்கலை பிசிசிஐ நியமித்துள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் ட்ராவிடுக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் அண்மையில் பிசிசிஐ-யால் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளரான மோர்னே மோர்கலை நியமனம் செய்துள்ளதாக பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷா சமீபத்தில் தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார்.
அவர் பதவியேற்ற பிறகு அபிஷேக் நாயரை பேட்டிங் பயிற்சியாளராகவும், மோர்னே மோர்கல்லை பந்து வீச்சு பயிற்சியாளராகவும் வேண்டும் என பிசிசிஐக்கு தனது விருப்பத்தைத் தெரிவித்தார். ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் கொல்கத்தா அணியில் கம்பீருடன் இணைந்து இவர்கள் இருவரும் பயிற்சியாளராகச் செயல்பட்டனர்.
அதனால் அந்த ஒரு ‘கெமிஸ்ட்ரியை’ தொடர வேண்டும் என விரும்பிய கம்பீர் இந்த விருப்பத்தை பிசிசிஐ-யின் முன் வைத்தார். கம்பீரின் இந்த வேண்டுகோளுக்கு அப்போது பிசிசிஐ ஆலோசிப்பதாக தங்களது பதிலைத் தெரிவித்தது. அதற்குக் காரணம் இந்திய அணியின் பயிற்சியாளராக வெளிநாட்டு வீரர்கள் பணியாற்றி இருந்தாலும், பெரிதளவு தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை.
மேலும், பந்து வீச்சு பயிற்சியாளராக ஒரு வெளிநாட்டு வீரர் செயல்படுவதற்கு பிசிசிஐ உடனே ஒத்துக்கொள்ளாது. அதனைத் தொடர்ந்து ரசிகர்களும் அப்போது மோர்னே மோர்கல் தான் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப் படுவார் எனக் கருத்துக்களைப் பகிர்ந்து வந்தனர். தற்போது, அதிகாரப்பூர்வ இந்த தகவலை வெளியிடவில்லை என்றாலும் ஜெய்ஷா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இது உறுதியாகி இருக்கிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…