இன்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டிற்கு பிறந்த நாள். இன்று இந்திய அணி 3-வது டெஸ்ட் போட்டியில் போராடி டிரா செய்தது. இந்நிலையில், சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணியின் ஆட்டம் “பெருங்சுவர்” ராகுல் டிராவிட்டுக்கு சிறந்த பிறந்தநாள் பரிசு என கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஏனென்றால் இந்த போட்டியில் அஸ்வின் 128 பந்திற்கு 39* ரன்களும், ஹனுமா விஹாரி 161 பந்திற்கு 23* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் டிராவிட்டை ரசிகர்கள் இந்திய அணியின் “பெருங்சுவர்” என்று அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி டிரா செய்வதற்கு பண்ட், புஜாரா , அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய 4 பேரின் பங்கு அதிகமாகவே இருந்தது. காரணம் இந்த போட்டியில் 4-வது இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை கொடுக்கவில்லை. இதனால், பண்ட், புஜாரா இருவரின் கூட்டணியில் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு வந்தது. இவர்கள் இருவரும் 148 ரன்கள் குவித்தனர்.
அதேபோல ஆட்டம் முடிவில் அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி இருவரும் சிறப்பாக விளையாடி விக்கெட்டை பறிகொடுக்கமல் விளையாடி வந்தனர். இதனால் இந்திய அணி டிரா செய்வதற்கு மிகவும் பெரும் உதவியாக இருந்தது. இதனால் சமூக வலைத்தளங்களில் இந்திய அணியையும், இந்த நான்கு வீரர்களையும் பாராட்டி வருகின்றனர்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…