RCBvsSRH
ஐபிஎல்2024: முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தனர்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியானது சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
அதன்படி ஹைதராபாத்தில்தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதலே டிராவிஸ் ஹெட் தனது ஒரு ருத்ரதாண்ட ஆட்டத்தை தொடங்கினார். மறுபுறம் விளையாடிய அபிஷேக் சர்மா வெறும் 34 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்து ஹென்ரிச் கிளாசென் களமிறங்க ஏற்கனவே அதிரடியாக விளையாடி வந்த தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் வெறும் 39 பந்தில் சதம் விளாசினர். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்தில் சதம் விளாசிய 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் கெயில் 30 , யூசுப் பதான் 37, டேவிட் மில்லர் 38 பந்துகளில் சதம் விளாசி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
சதம் விளாசிய 2-வது பந்திலே 102 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் ஐடன் மார்க்ராம் ஒருபுறம் ஹென்ரிச் கிளாசென் அதிரடி காட்ட மறுபுறம் அவருக்கு துணையாக ஐடன் மார்க்ராம் விளையாடி வந்தார். இதற்கிடையில் கிளாசென் 23 பந்தில் அரைசதம் விளாச அடுத்த 8 பந்தில் 17 ரன்கள் குவித்து, 67 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த அப்துல் சமது தனது பங்கிற்கு 35* ரன்கள் குவித்தார். இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தனர். இன்றைய போட்டியில் 287 ரன்கள் எடுத்தது மூலம் ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இது பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி அடித்த தங்களது சாதனையை முறியடித்துள்ளது. இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி 22 சிக்ஸர் விளாசி உள்ளது. கடந்த மாதம் 27ஆம் தேதி மும்பைக்கு எதிராக ஹைதராபாத் அணி 277 ரன்கள் குவித்தனர். இந்த போட்டியில் ஹைதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…
ஸ்ரீநகர் : இந்தியர்களுக்கு மற்றுமொரு கருப்பு நாளாக காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அமைந்திருக்கிறது. ஆம், நேற்றைய தினம் ஜம்மு…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…