12 வாரங்கள் கிரிக்கெட் விளையாட முடியாது என்ற காரணத்தால் பென் ஸ்டோக்ஸ் தனது சொந்த நாடான இங்கிலாந்திற்கு செல்லவுள்ளார்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 12 ஆம் தேதி மோதியது. இந்த போட்டியில், கிறிஸ் கெய்ல் பேட்டிங் செய்யும் போது அவர் அடித்த பந்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பிடித்தார். அப்போது அவரின் விரலில் காயம் ஏற்பட்டது.
இதனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடமாட்டார் என்றும் அணியுடன் இருந்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவார் என்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் கூறியிருந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் அவர் இடது விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த முறிவு ஏற்பட்டதன் காரணமாக அவரால் 12 வாரங்கள் கிரிக்கெட் விளையாட முடியாது என்ற காரணத்தால் பென் ஸ்டோக்ஸ் தனது சொந்த நாடான இங்கிலாந்திற்கு செல்லவுள்ளார். அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்வர் என்று கூறப்படுகிறது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் வெற்றி பெற்று புள்ளி விவரப்பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…