12 வாரங்கள் கிரிக்கெட் விளையாட முடியாது என்ற காரணத்தால் பென் ஸ்டோக்ஸ் தனது சொந்த நாடான இங்கிலாந்திற்கு செல்லவுள்ளார்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 12 ஆம் தேதி மோதியது. இந்த போட்டியில், கிறிஸ் கெய்ல் பேட்டிங் செய்யும் போது அவர் அடித்த பந்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பிடித்தார். அப்போது அவரின் விரலில் காயம் ஏற்பட்டது.
இதனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடமாட்டார் என்றும் அணியுடன் இருந்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவார் என்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் கூறியிருந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் அவர் இடது விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த முறிவு ஏற்பட்டதன் காரணமாக அவரால் 12 வாரங்கள் கிரிக்கெட் விளையாட முடியாது என்ற காரணத்தால் பென் ஸ்டோக்ஸ் தனது சொந்த நாடான இங்கிலாந்திற்கு செல்லவுள்ளார். அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்வர் என்று கூறப்படுகிறது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் வெற்றி பெற்று புள்ளி விவரப்பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…