Stephen Fleming [file image]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் ட்ராவிடுக்கு அடுத்த படியாக ஸ்டீபன் ஃப்ளெமிங்கை செயலாற்ற வைக்க பிசிசிஐ திட்டம் தீட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது செயல்பட்டு வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிடின் பதவிக்காலமானது இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. அதன்பிறகு புதிய தலைமை பயிற்சியாளரை செயலாற்ற வைக்க பிசிசிஐ திட்டம் வகுத்து வந்த நிலையில் புதிய பயிற்சியாளருக்கான தேடலில் இருந்து வருகிறது. அந்த பதவிக்கான தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே பிசிசிஐ X தளத்தில் அறிவித்திருந்தது.
மேலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தொடர்ந்து பணியாற்ற ராகுல் டிராவிட்டும் பெரிதாக விருப்பம் தெரிவிக்காத நிலையில் இந்த தேடலில் சர்வேதச கிரிக்கெட் போட்டிகள் விளையாடும் உலக நாடுகளிலிருந்த்து பல நிபந்தனைகளுடன் திறமையான தகுதியுள்ள ஒருவரை தேர்வு செய்ய பிசிசிஐ எதிர்ப்பார்க்கிறது. இந்நிலையில், பிசிசிஐ புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிகிறது.
அது என்னவென்றால் ஐபிஎல் தொடரில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற பயிற்சியாளரான சிஎஸ்கே அணியின் தலைமைபயிற்சியாளராக பணியாற்றி வரும் ஸ்டீபன் பிளெமிங்கை இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கும் எண்ணத்தில் பிசிசிஐ பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் தொடர் ஆரம்பித்தது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வரும் ஸ்டீபன் பிளெமிங் வெற்றிகரமான பயிற்சியாளரான ஐபிஎல் தொடரில் பணியாற்றி வருகிறார். மேலும், சிஎஸ்கே அணியை வைத்து 5 முறை ஐபிஎல் கோப்பையையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரிடம் பிசிசிஐ பேச்சு வார்த்தை நடத்த முற்படுவதாக கிரிக்கெட் வட்டாரங்களில் சில தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஆனால், அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவிக்காததாகவும், அந்த பேச்சு வார்த்தைக்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும், இந்த சலுகையை அவர் ஏற்க மாட்டார் எனவும் வெளியான தகவல்கள் மூலம் தெரிகிறது. மேலும், அவர் இந்திய அணிக்கு பணியாற்றுவது அவரது விருப்பம் என்பதால் பிசிசிஐயும் அவரை வற்புறுத்தாது எனவும் தெரிகிறது.
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…