பிருத்வி ஷா, தேவ்தத் படிக்கலை இங்கிலாந்துக்கு அனுப்ப பிசிசிஐ மறுப்பு
நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தIND vs ENGதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி, வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4- ஆம் தேதி நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்கேறப்பதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார்கள்.
இந்த நிலையில், நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியில், தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். இருவரும் அதே போல இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுப்மன் கில்லுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது. இதனால் அவர் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில், இலங்கைக்கு சென்றுள்ள தேவ்தத் படிக்கல், பிருத்வி ஷா இருவரையும், இங்கிலாந்திற்கு அனுப்ப இந்திய அணி சார்பில் கடந்த மாதம் ஜூன் 28 ஆம் தேதி தேர்வாளர்களுக்கு கடிதம் அனுப்பட்டது. ஆனால், ஏற்கனவே கே.எல்.ராகுல் மற்றும், அபிமன்யூ ஈஸ்வரன் இருப்பதால் கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்ததாகவே கூறப்படுகிறது.
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…