உலகக்கோப்பைக்கு பின் தோனியை கேப்டனாக நீட்டிக்க வைத்ததில் பெருமை கொள்கிறேன்.! – சீனிவாசன் பேட்டி.!

Published by
மணிகண்டன்

2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின்னர் தோனி கேப்டனாக நீட்டிக்க தான் எவ்வாறு உதவினேன் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன்  கூறியுள்ளார்.

தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2011ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பின்னர், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 4-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதன்காரணமாக டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து தோனியை நீக்க அப்போதைய பிசிசிஐ நிர்வாகிகள் சிலர் தீர்மானித்தனர்.

அதனை அப்போதைய பிசிசிஐ தலைவராக இருந்த சீனிவாசன் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனை அவரே ஒரு பத்திரிக்கையின் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில்,’ 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற உலகக் கோப்பைக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து தோனியை நீக்குவதற்கு பிசிசிஐ நிர்வாகிகள் சிலர் தீர்மானத்து இருந்தனர். அன்றைய தினம் விடுமுறை என்பதால் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தேன். இருந்தாலும் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட உடனே பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றேன். அப்போது 1983ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி தோனி தலைமையில் தான் உலக கோப்பையை வென்றுள்ளது என்பதை எடுத்துரைத்தேன். இதனால் அவர் ஒரு சாதாரண வீரராக அணியில் தொடர விரும்பவில்லை எனவும் பதிவிட்டேன்.

அப்போதைய பிசிசிஐ விதிகளின்படி நிர்வாக உறுப்பினர்கள் எடுக்கும் முடிவு பிசிசிஐ தலைவர் கையெழுத்திட்டால் மட்டுமே அது நிறைவேறும். அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டின் விதிமுறைகளின்படி இந்த முடிவு தவறாக கூட இருக்கலாம். ஆனால் அன்றைய பொழுதில் தோனி கேப்டனாக தொடர்வதற்கு தான் ஆதரவு அளித்தது மகிழ்ச்சி அளிப்பதாக சீனிவாசன் கூறியுள்ளார்.

மேலும், தோனியின் ஓய்வு கருத்து ஸ்ரீனிவாசன் கூறுகையில் ‘மகேந்திரசிங் தோனி மிகவும் நியாயமானவர். அவரை அருகிலிருந்து அறிந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. மேலும், நான் வாழ்நாளில் சந்தித்த சிறந்த கிரிக்கெட் வீரர்களின் எம்.எஸ்.தோனி விதிவிலக்காவர். அவர் எப்போதும் இந்திய அணி மற்றும் அவர் விளையாடும் அணியை பற்றி மட்டுமே சிந்திப்பார் என அவர் கூறினார்.

அவர் மேலும் தோனியை பற்றி கூறுகையில், ‘ தோனி தேர்வு குழு கூட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறார். அப்போது அவரது பார்வை நியாயமானதாக இருக்கும். எந்தவித பாரபட்சமும் காட்டமாட்டார். மிகவும் சமநிலையானவர். மேலும், ஒவ்வொரு வீரரின் திறன் அறிந்து அவர்களின் திறமையை எவ்வாறு கையாள்வது தோனிக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அதனை ஆரவாரமில்லாமல் செய்து முடிப்பார். எல்லோரும் தோனியுடன் விளையாட விரும்புவார்கள் அவர் இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஹீரோ.’ என பதிவிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

31 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

39 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

48 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

56 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

1 hour ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago