BANvIND [file image]
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடரின் 4-வது போட்டி இன்று ப்ளூம்ஃபோன்டைனில் இருக்கும் மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆதர்ஷ் சிங் அதிரடியாக விளையாடி 76 ரன்கள் எடுத்தார். அர்ஷின் குல்கர்னி 7, முஷீர் கான் 3 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர்.
டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட் இடம்பெறுவது சந்தேகம் – ஜாகீர் கான்!
பிறகு களமிறங்கிய கேப்டன் உதய் சஹாரன் களத்தில் நின்று அதிரடியாக விளையாடி 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளார்கள். இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ஆதர்ஷ் சிங் 76, உதய் சஹாரன் 64, சச்சின் தாஸ் 26 ரன் எடுத்தனர்.
வங்காளதேசம் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக மருஃப் மிருதா 5, விக்கெட்களையும், சௌத்ரி எம்டி ரிஸ்வான், மஹ்புஸூர் ரஹ்மான் ரபி ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்கள். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 251 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கவுள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…