மோசமான வரலாறு படைத்தது இலங்கை அணி..!! பங்களாதேஷ் சாதனை வெற்றி.

Published by
Dinasuvadu desk

14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நேற்று தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டத்தில்  இலங்கையும், வங்கதேசமும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீமின் ‘தோனி’ ஆட்டத்தால் 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்கள் எடுத்தது. 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வங்கதேச அணியில் களமிறங்கிய முஷ்பிகுர், 150 பந்துகளை சந்தித்து 144 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி, 35.2வது ஓவரில் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பலம் வாய்ந்த இலங்கை அணி, படுமோசமாக தோற்று மீண்டும் ரசிகர்களிடையே அதிருப்தியை சம்பாதித்துள்ளது. அதேசமயம், 137 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றிப் பெற்றது வங்கதேசம்.

வங்கதேசத்திற்கு வெளியே அந்த அணி பெற்றிருக்கும் மிகப்பெரிய வெற்றி இதுதான். இதற்கு முன்னதாக, 2013ல் புலேவாயோ நகரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 121 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றதே வங்கதேச அணியின் வங்கதேசத்திற்கு வெளியேயான பெரிய வெற்றியாக இருந்தது.

டாக்காவில் இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 163 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே, வங்கதேச அணியின் நம்பர்.1 பெரிய வெற்றியாகும்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றிலேயே இலங்கையின் மிகப்பெரிய தோல்வி இதுதான். இதற்கு முன்னதாக, 1986ல் நடந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானிற்கு எதிராக 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே இலங்கையின் மிகப்பெரிய தோல்வியாக இருந்தது. ஆசிய கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய மூன்று முக்கிய அணிகளின் பெரிய தோல்வியும் நேற்றைய இலங்கையில் தோல்வி தான். இதற்கு முன் 2008ல் இலங்கைக்கு எதிராக இந்தியா 100  ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே இந்த மூன்று அணிகளில் பெரிய தோல்வியாக இருந்தது. அதையும் நேற்று இலங்கை பிரேக் செய்துள்ளது.

வங்கதேசத்திற்கு எதிராக இவ்வளவு குறைந்த ரன்கள் எடுத்து இலங்கை சுருண்டிருப்பதிலும் நேற்றைய போட்டி தான் நம்பர்.1. இதற்கு முன்னதாக, 2009ல் டாக்காவில் நடந்த போட்டியில் 147 ரன்கள் எடுத்து இலங்கை ஆல் அவுட் ஆகியிருந்தது.

நேற்றைய போட்டியில் வங்கதேசம் அடித்த மொத்த ரன்கள் 261. அதில் முஷ்பிகுர் ரஹீம் மட்டும் அடித்த ரன்கள் 144. அதாவது வங்கதேச ஸ்கோரில் 55.17 சதவிகித பங்கு முஷ்பிகுர் உடையது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், தனிநபரின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர், நேற்று முஷ்பிகுர் அடித்த 144 ரன்களாகும். அதேசமயம், பாகிஸ்தானின் யூனுஸ் கானும் 2004ம் ஆண்டு ஹாங்காங்கிற்கு எதிராக 144 ரன்கள் அடித்திருக்கிறார். ஆனால், 2012ம் நடந்த ஆசிய கோப்பை தொடரில், ‘தளபதி’ விராட் கோலி பாகிஸ்தானிற்கு எதிராக 183 ரன்கள் விளாசியதே, இதுவரை தனி நபர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோராகும்.

ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச வீரர் ஒருவரின் ஐந்தாவது சதம் இதுவாகும். தவிர, முஷ்பிகுர் ரஹீமின் இரண்டாவது ஆசிய கோப்பை சதமாகும். நேற்று முஷ்பிகுர் அடித்த 144 ரன்கள் தான், ஒருநாள் போட்டிகளில் வங்கதேச வீரர் ஒருவரின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும். 2009ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக தமீம் இக்பால் அடித்த 154 ரன்கள் தான் இதுவரை டாப் ஸ்கோர்.

DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago