ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய பங்களாதேஷ் வீரர் ஷோஹிதுல் 10 மாதங்களுக்கு தடை – ஐசிசி
பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் ஷோஹிதுல் இஸ்லாம் ஐசிசி ஊக்கமருந்து எதிர்ப்பு சட்டத்தின் விதி 2.1 ஐ மீறிய குற்றத்திற்காக 10 மாதங்களுக்கு கிரிக்கெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 4, 2022 அன்று டாக்காவில் ஐசிசியின் போட்டிக்கு முன்னர் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் அவரது சிறுநீரகத்தில் க்ளோமிஃபென் இருப்பது கண்டறியப்பட்டது.
க்ளோமிஃபென் WADA இன் தடைசெய்யப்பட்ட பட்டியலின் கீழ் ஒரு குறிப்பிட்ட பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த க்ளோமிஃபென் போட்டி மற்றும் போட்டிக்கு வெளியே தடைசெய்யப்பட்டுள்ளது.
இடைநீக்கத்தை வழங்கும்போது, தடைசெய்யப்பட்ட பொருளை ஷோஹிதுல் கவனக்குறைவாக உட்கொண்டதை ஐசிசி உறுதிப்படுத்தியது.அவர் தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி தனது விளையாட்டு செயல்திறனை மேம்படுத்தும் எண்ணம் அவருக்கு இல்லை என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது ஷோஹிதுல் சற்று ஆறுதலை தந்துள்ளது.