நேபாளை பந்தாடி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது வங்கதேசம்.!!

Published by
அகில் R

டி20I: இன்று ‘D’ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி பெற்றுள்ளது.

நடப்பாண்டு 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் நடைபெற்று வரும் லீக் போட்டிகள் நிறைவடையும் கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நடைபெற்ற இந்த தொடரின் 37-வது போட்டியில் நேபால் அணியும், வங்கதேச அணியும் மோதியது. இந்த போட்டியில் வங்கதேச வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியும் என நெருக்கடியான சூழ்நிலையுடன் போட்டிக்கு களமிறங்கியது வங்கதேச அணி.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி, வங்கதேச அணியை முதலில் பேட்டிங் செய்ய பரிந்துரைத்தது. இதன் மூலம் முதலில் பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணி ரன்களை சேர்த்து கொண்டே இருந்தாலும், மறுமுனையில் விக்கெட்டுகளையும் இழந்து வந்தது. இதனால் பேட்டிங்கில் தடுமாற்றத்தை கண்ட வங்கதேச அணி 19.3 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 106 ரன்களை மட்டுமே எடுத்தது.

வங்கதேச அணியில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் 20 ரன்களை தாண்டவில்லை, இருப்பினும் அதிகாட்சமாக ஷகிப் அல் ஹசன் 17 ரன்களை எடுத்திருந்தார். அதனை தொடர்ந்து எளிய இலக்கான 107 ரன்களை எடுக்க பேட்டிங் களமிறங்கியது நேபாள் அணி. எளிய இலக்கை வேகமாய் அடிக்க முயற்சித்ததன் காரணாமாக, எந்த ஒரு வீரரும் நிதானமாக விளையாடாததால், அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

மேலும், வங்கதேச அணியின் பந்து வீச்சும் நேபாள் அணிக்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்தது. இதனால், 19.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், 21 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச இந்த போட்டியில் வெற்றியை பெற்றது. சிறப்பாக பந்து வீசிய தன்சிம் ஹசன் சாகிப் 4 விக்கெட்டுகளும், முஸ்தபிஸுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டனர்.

மேலும், இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் வங்கதேச அணி அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும், வங்கதேச அணியுடன், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் குரூப்-1 இல் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

5 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

5 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

7 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

8 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

8 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

8 hours ago