டி20I: இன்று ‘D’ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி பெற்றுள்ளது.
நடப்பாண்டு 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் நடைபெற்று வரும் லீக் போட்டிகள் நிறைவடையும் கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நடைபெற்ற இந்த தொடரின் 37-வது போட்டியில் நேபால் அணியும், வங்கதேச அணியும் மோதியது. இந்த போட்டியில் வங்கதேச வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியும் என நெருக்கடியான சூழ்நிலையுடன் போட்டிக்கு களமிறங்கியது வங்கதேச அணி.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி, வங்கதேச அணியை முதலில் பேட்டிங் செய்ய பரிந்துரைத்தது. இதன் மூலம் முதலில் பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணி ரன்களை சேர்த்து கொண்டே இருந்தாலும், மறுமுனையில் விக்கெட்டுகளையும் இழந்து வந்தது. இதனால் பேட்டிங்கில் தடுமாற்றத்தை கண்ட வங்கதேச அணி 19.3 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 106 ரன்களை மட்டுமே எடுத்தது.
வங்கதேச அணியில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் 20 ரன்களை தாண்டவில்லை, இருப்பினும் அதிகாட்சமாக ஷகிப் அல் ஹசன் 17 ரன்களை எடுத்திருந்தார். அதனை தொடர்ந்து எளிய இலக்கான 107 ரன்களை எடுக்க பேட்டிங் களமிறங்கியது நேபாள் அணி. எளிய இலக்கை வேகமாய் அடிக்க முயற்சித்ததன் காரணாமாக, எந்த ஒரு வீரரும் நிதானமாக விளையாடாததால், அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
மேலும், வங்கதேச அணியின் பந்து வீச்சும் நேபாள் அணிக்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்தது. இதனால், 19.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், 21 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச இந்த போட்டியில் வெற்றியை பெற்றது. சிறப்பாக பந்து வீசிய தன்சிம் ஹசன் சாகிப் 4 விக்கெட்டுகளும், முஸ்தபிஸுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டனர்.
மேலும், இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் வங்கதேச அணி அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும், வங்கதேச அணியுடன், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் குரூப்-1 இல் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
துபாய் : இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், நியூஸிலாந்து மகளிர் அணியும்…
சென்னை : மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இந்த…
துபாய் : நடைபெற்று வரும் மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடரில் 3-வது போட்டியானது இன்று துபையில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : மெட்டா நிறுவனம் அடிக்கடி வாட்அப்பில் பயனர்களைக் கவர்ந்த இழுக்கும் வகையில், தொடர்ச்சியாக நல்ல அப்டேட்டுகளை கொண்டு வருகிறது.…
சென்னை - சரஸ்வதி பூஜை கொண்டாடுவதன் நோக்கம் மற்றும் வித்யாரம்பம் செய்யும் முறையை பற்றி இந்த ஆன்மீக குறிப்பில் காணலாம் …