இன்றைய 28-வது போட்டியில் பெங்களூர் Vs கொல்கத்தா அணிகள் மோதியது. இப்போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக படிக்கல், ஆரோன் பிஞ்ச் இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடி வந்த படிக்கல் 33 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்த சில ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த ஆரோன் பிஞ்ச் அரைசதம் அடிக்கமால் 47 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர், கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் இருவரும் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், கோலி 33* மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் 73* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 194 ரன்கள் எடுத்தனர்.
195 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக டாம் பான்டன், சுப்மான் கில் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே டாம் பான்டன் 8 ரன் எடுத்து வெளியேற, பின்னர் இறங்கிய ராணா வந்த வேகத்தில் 9 ரன்னுடன் நடையை காட்டினார். இதைத்தொடர்ந்து, நிதானமாக விளையாடிய சுப்மான் கில் 33 ரன்னில் விக்கெட்டை இழக்க பின்னர், களம் கண்ட வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்முடிவில் 9 விக்கெட்டை இழந்து 112 ரன்கள் எடுத்து 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றதால் 10 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு சென்றுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…