கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தாஅணியில் தொடக்க வீரராக ரஹானே, வெங்கடேஷ் இருவரும் களமிறங்கினர். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் 4-வது ஓவரில் ஆகாஷ் தீப் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் ரஹானே 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரி அடித்தார். இதனால், நிலைத்து நிற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் 13 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற கடைசியில் களமிறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடியாக விளையாடி 25 ரன்கள் குவித்தார். அதில் 3 சிக்சர் ஒரு பவுண்டரி அடங்கும்.
இறுதியாக கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பெங்களூர் அணியில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3, ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டை பறித்தனர்.
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின்…
திருச்சி : மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் படித்து…
ஒடிசா : வருகின்ற 9ம் தேதி கட்டாக்கில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாட…
உத்தரப் பிரதேசம் : பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 4ஆவது முறையாக, மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார்-18…
வேலூர்: திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற 4 மாத கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட…