RCBvCSK
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் சென்னை அணியும், பெங்களூர் அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. இப்போோட்டில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 218 ரன்கள் எடுத்தனர்.
இதில் அதிகபட்சமாக கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 54 ரன்களும், விராட் கோலி 47 ரன்களும், ரஜத் படிதார் 41 ரன்களும், கேமரூன் கிரீன் 38* ரன் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். சென்னை அணியில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டையும், மிட்செல் சான்ட்னர், துஷார் தேஷ்பாண்டே தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
219 ரன்கள் இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா இருவரும் களம் இறங்கினார். முதல் பந்திலே ருதுராஜ் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து டேரில் மிட்செல் களமிறங்க அவர் வந்த வேகத்தில் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். இதனால் சென்னை அணி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டை பறி கொடுத்தது.
பின்னர் ரஹானே, ரச்சின் ரவீந்திரா இருவரும் கூட்டணி அமைத்து சரிவில் இருந்த அணியை மீட்டுக் கொண்டு வந்தனர். நிதானமாக விளையாடி வந்த ரஹானே 33 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தார். இவர்கள் இருவரின் கூட்டணியில் கிட்டத்தட்ட 66 ரன்கள் எடுக்கப்பட்டது.
அடுத்து சிவம் துபே களமிறங்க நிதானமாக சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்து 61 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆகிய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இருப்பின் அடுத்த சில நிமிடங்களில் சிவம் துபே 7 ரன்னிலும், மிட்செல் சான்ட்னர் 3 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
அடுத்து ஜடேஜா, தோனி இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். இருப்பினும் டோனி 25 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இறுதியாக சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக 4-வது அணியாக பெங்களூர் பிளே ஆப் சென்றது. கடைசிவரை களத்தில் ஜடேஜா 42* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…
சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…