உலகக்கோப்பையில் இன்றுடன் லீக் போட்டிகள் முடிய உள்ளது.நேற்று பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியுடன் கடைசி லீக் போட்டியை விளையாடியது.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டை இழந்து 315 ரன்கள் குவித்தது.அதில் இமாம்-உல்-ஹக் 100 , பாபர் ஆசாம் 96 ரன் குவித்தனர்.பிறகு இறங்கிய பங்களாதேஷ் 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 221ரன்கள் எடுத்து 94 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் மூன்று அரைசதம் ,ஒரு சதம் என 474 ரன்கள் குவித்து உள்ளார்.இந்நிலையில் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியில் அதிகபட்ச ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
1992-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜவேத் மியான்தத் 437 ரன்கள் குவித்து இருந்தார்.அதுவே உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியில் அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. தற்போது பாபர் ஆசாம் 474 ரன்கள் அடித்து 27 வருட சாதனையை முறியடித்து உள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…