பாபர் அசாம் குறித்து கருத்து தெரிவித்த கவுதம் கம்பிருக்கு, பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி பதிலளித்துள்ளார்.
பாபர் அசாமின் தற்போதைய பேட்டிங் ஃபார்ம் மற்றும் டி-20 உலகக்கோப்பையில் பாபர் தலைமையில் பாகிஸ்தான் அணி விளையாடி வரும் நிலையை பார்த்து கவுதம் கம்பிர், பாபர் அசாம் குறித்து ஒரு கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் கூறியதாவது, பாபர் தன்னைப் பற்றி யோசிக்காமல் அணியைப் பற்றி யோசித்து விளையாட வேண்டும். பாபர் மிடில் ஆர்டரில் இறங்கி விளையாட வேண்டும், ஃபக்கார் சமான் போன்ற வீரரை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்க வேண்டும். ஆட்டத்தின் போக்கு கேப்டனின் திட்டப்படி செல்லவில்லை எனில் சுயநல எண்ணத்துடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காமல் அணியின் வெற்றிக்காக யோசித்து மிடில் ஆர்டரில் பாபர் களமிறங்கவேண்டும் என்று கம்பிர் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி, வார்த்தைகளை உபயோகப்படுத்தும் போது கவனமாக இருக்கவேண்டும். வீரர்கள் சில சமயங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகும்போது, அவருக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் ஆக்கபூர்வமானதாகவும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கவேண்டும் என்றும் பதில் கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்காக இதுவரை விளையாடியுள்ள வீரர்களில் பாபர் அசாம் போன்று எந்த வீரரும் இவ்வளவு வெற்றி ஆட்டங்களை கொடுத்ததில்லை. அவர் மீது மக்கள் நிறைய நம்பிக்கை வைத்துள்ளனர் என்று அப்ரிடி மேலும் தெரிவித்தார்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…