கடும் கோபத்தில் கேள்வி எழுப்பிய அசாருதீன் ..! என்னதான் செய்கிறது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் ?

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மகமது அசாருதீன் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ள மோசமான வசதிகள் தற்போது குறித்து மீண்டும் கவலை தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் உள்ள மோசமான நிலைமையை குறித்து பலரும்  பலவித கருத்துக்களை முன்பே கூறி வந்தனர். அதே போல ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரான அசாருதீனும் பல முரண்பாடான கருத்துக்களை முன்வைத்தார். அதிலும் சமீபத்திய சம்பவம் ஒன்று அவரை அதிக அளவில் கோபம் அடைய வைத்துள்ளது. அது என்னவென்றால் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மின் இணைப்பை மின்சார வாரியம் துண்டித்தது.

ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் இந்த நிலையிலும் தற்போது வரை மைதானத்தில் உள்ள மின்சாரத்திற்கான எந்த ஒரு பில்லையும் காட்டாமல் இருந்ததால்,  ஹைதராபாத் மின்சார வாரியம் மைதானத்தில் உள்ள மின்சாரத்தை துண்டித்துள்ளது. அதில் செலுத்தப்படாத நிலுவைத் தொகை, தற்போது ரூ.3 கோடியைத் தாண்டியுள்ளது. இருப்பினும், உப்பல் ஸ்டேடியம் நிர்வாகம், TSSPDCL இடையேயான பேச்சுவார்த்தை மற்றும் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மைதானத்தில் மின்சாரம் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனை விமர்சிக்கும் வகையில் முன்னாள் கேப்டனான அசாருதீன், “தற்போதைய ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் மைதானத்தில் நடக்கும் போட்டிகள் சிக்கல்களால் பாதிக்கபட்டுக் கொண்டே இருக்கிறது அதிலும் மைதானத்தில் மோசமான கழிப்பறைகள், போதுமான தண்ணீர் வசதிகள் இல்லாமல் இருப்பது மற்றும் அங்கீகாரமற்ற நுழைவு வாயில்கள்  இதெல்லாமே ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் (HCA) இன் கண்காணிப்பின் கீழ் தொடர்கின்றன

மேலும், சி.எஸ்.கே நிர்வாகம் கூட  இன்றைய போட்டிக்கான சீட்டுகளை வாங்குவதற்கு சிரமபட்டது. பணம் செலுத்தப்படாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இத்தனை பிரச்சனைகள் இந்த மைதானத்தில் இருந்து வருகிறது. இதை முன்கூட்டியே சரி செய்வோம் என்று ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் (HCA) மற்றும் APEX கவுன்சில் உறுதி அளித்தது, ஆனால் மாற்றம் இல்லை”, என்று அவரது X தளத்தில் பதிவிட்டுருந்தார்.

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபி : முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்! இந்தியா அபார வெற்றி…

துபாய்: துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும், முகமது…

32 minutes ago

INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…

13 hours ago

மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!

ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…

14 hours ago

NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…

துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…

14 hours ago

வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!

சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…

15 hours ago

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…

17 hours ago