#Breaking : சர்வதேச கிரிக்கெட் நடுவர்களில் ஒருவரான பாகிஸ்தானை சேர்ந்த அசாத் ரவுப் திடீர் மரணம்.!

Default Image

சர்வதேச முன்னாள் கிரிக்கெட் நடுவரான 66 வயதான அசாத் ரவுப் இன்று பாகிஸ்தான், பஞ்சாப் மாநில தலைநகர் லாகூரில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து அவர் காலத்தில் சிறந்த நடுவர்களின் ஒருவராக செயல்பட்டவர் முன்னாள் சர்வதேச கிரிக்கெட்நடுவர் அசாத் ரவுப் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இவர் பாகிஸ்தானில் 71 முதல் தர ஆட்டங்களில் மிடில்-ஆர்டர் பேஸ்ட்மேனாக வலம் வந்துள்ளார். மேலும். நேஷனல் வங்கி மற்றும் ரயில்வே கிரிக்கெட் அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார்.

நடுவராக, ரவுஃப் 64 டெஸ்ட் போட்டிகளில் 49இல் ஆன்-பீல்டு நடுவராகவும், 15 போட்டிகளில் மூன்றாவது நடுவராகவும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளர். 139 ஒருநாள் போட்டிகளில் 98 ஆன்-பீல்டு நடுவராகவும், 41 போட்டிகளில் மூன்றாவது நடுவராகவும் செயல்பட்டுள்ளார். அதே போல, 28 20 ஓவர் போட்டிகளில் 23 ஆன்-பீல்டு மாடுவராகவும்,  5இல் மூன்றாவது நடுவராகவும் இருந்துள்ளார்.

66 வயதான அசாத் ரவுப் இன்று பாகிஸ்தான், பஞ்சாப் மாநில தலைநகர் லாகூரில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் மறைவுக்கு பாகிஸ்தான் வீரர்கள், கிரிக்கெட் அமைப்பு தவிர சர்வதேச கிரிக்கெட் அமைப்புகளும் இரங்கலை தெரிவித்து வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்