#AUSvPAK : அதிரடி ஆட்டம் காட்டி பாகிஸ்தானை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா.!

Published by
மணிகண்டன்

177 எனும் கடின இலக்கை 19 ஓவரிலேயே எட்டி பிடித்து பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்குள் நுழைந்தது.

டி20 உலக கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. இதில் வெற்றிபெறும் அணி நியூசிலாந்து அணியுடன் இறுதி போட்டியில் மோதும். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழந்து 176 ரன்கள் எடுத்து இருந்தது. இதில் அதிகபட்சமாக ரிஸ்வான் 67 ரன்கள் எடுத்து இருந்தார். ஃபகார் சமான் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் பாபர் அசாம் 39 ரன்கள் எடுத்திருந்தார்.

ஆஸ்திரேலியா அணி சார்பாக ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும், கம்மின்ஸ், சாம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

20 ஓவரில் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் பின்ச் முதல் பந்தில் LBW முறையில் ஆட்டம் இழந்தார். ஆனால், இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான வார்னர் நிதானமாக விளையாடி 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மிச்செல் மார்ஸ் 28 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 5 ரன்களுக்கும் மேக்ஸ்வெல் 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்த முதன்மை வீரர்கள் ஆட்டமிழந்ததால் அந்த சமயம் பாகிஸ்தான் அணிதான் வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டிருந்தது.

ஆனால், அதன் பிறகு களமிறங்கிய ஸ்டோனிஸ் மற்றும் மேத்யூ வாடே ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். அதிலும் மேத்யூ வாடே 17 பந்தில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடித்து 41 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற செய்தார். ஸ்டோனிஸ் தனது பங்கிற்கு 31 பந்துகளில் 40 ரன்கள் விளாசி இருந்தார்.

இறுதியில் 19 ஓவர் முடிவிலேயே 177 எனும் கடின இலக்கை எளிதில் எட்டி ஃபைனலுக்கு சென்றது ஆஸ்திரேலிய அணி.

பாகிஸ்தான் அணி சார்பாக சதாப் கான் 4 ஓவர் வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். சாகின் அப்ரிடி ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

வரும் ஞாயிற்று கிழமை (நவம்பர் 14) அன்று துபாயில் நடக்கும் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியும் ஆஸ்திரேலிய அணியும் பலபரிட்சை நடத்த உள்ளன.

Published by
மணிகண்டன்

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

34 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

36 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

1 hour ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

4 hours ago