கிரிக்கெட்

#AUSvsSL : பந்துவீச்சில் பயத்தை காட்டிய ஆஸ்ரேலியா! இலங்கை வைத்த டார்கெட் இது தான்!

Published by
பால முருகன்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 14-வது லீக் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்ரேலியா, அணியும் குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் மோதுகிறது. இந்த போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் இந்த போட்டி இந்த இரண்டு அணிக்கும் மிகவும் முக்கியமான போட்டி என்றே கூறலாம். ஏனென்றால்,  இரண்டு அணியும் கடந்த 2 லீக் ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க ஆகிய  அணிகளுடன் மோதியபோது தோல்வி கண்டுள்ளது. அதுபோல இலங்கை அணி, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் தோல்வி கண்டுள்ளது.

எனவே, எப்படியாவது இந்த போட்டியில் வெற்றிபெற்று இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு களமிறங்கி உள்ளது. இந்நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். பதும் நிஸ்ஸங்க 67 பந்துகளில் 61 ரன்களும் குசல் பெரேரா 82 பந்துகளில் 78 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்கள். அடுத்ததாக  குசல் மெண்டிஸ் 9 ரன்களும் , சதீர சமரவிக்ரம 8, சரித் அசலங்க 23, தனஞ்சய டி சில்வா 7, துனித் வெல்லலகே 2, சாமிக்க கருணாரத்ன 2, மஹீஷ் தீக்ஷன 0, லஹிரு குமார 4, தில்ஷான் மதுஷங்க 0 ரன்கள் எடுத்தனர்.

இறுதியாக 43.3 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 209 ரன்கள் எடுத்துள்ளனர். ஆஸ்ரேலியா அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் ஆடம் ஷாம்பா 4 விக்கெட்களும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர். இலங்கை அணி 209 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக 210 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்ரேலியா அணி களமிறங்குகிறது.

மேலும், இதுவரை இலங்கை அணியும்  ஆஸ்ரேலியா அணியும்  11 முறை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 2 முறை இலங்கை அணியும்  8 முறை ஆஸ்ரேலியா அணியும், வெற்றிபெற்றுள்ளது. ஒரே ஒரு போட்டி மட்டும்  சமநிலையில் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

9 minutes ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…

33 minutes ago

Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…

53 minutes ago

பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…

56 minutes ago

ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!

ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…

1 hour ago

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

3 hours ago