#AUSvsSA: குயின்டன், மார்க்ராம் அதிரடி ஆட்டம்..! ஆஸ்திரேலிய அணிக்கு 312 ரன்கள் இலக்கு.!

Published by
செந்தில்குமார்

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 10வது லீக் போட்டியில், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா மற்றும் தேம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிகள் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீச்சை செய்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, தென் ஆப்பிரிக்கா அணியில் முதலில் குயின்டன் டி காக், தேம்பா பாவுமா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். இதில் குயின்டன் பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுபுறம் தேம்பா பாவுமா, குயின்டனுடன் இணைந்து விளையாடி வந்த நிலையில் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இதன்பிறகு ரஸ்ஸி வான் களமிறங்கி விளையாட, குயின்டன் அரைசதம் கடந்து அசத்தினார். நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த ரஸ்ஸி வான் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரையடுத்து, ஐடன் மார்க்ராம் விளையாட வந்த நிலையில் குயின்டன் 4 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் அடித்து சதம் அடித்து விளாசினார். பிறகு 109 ரன்களில் களத்தை விட்டு வெளியேறினார்.

இதனையடுத்து, ஹென்ரிச் கிளாசென் மற்றும் மார்க்ராம் இணைந்து விளையாட, மார்க்ராம் 56 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். பிறகு ஹென்ரிச் கிளாசென் 29 ரன்களிலும், மார்கோ ஜான்சன் 26 ரன்களிலும், டேவிட் மில்லர் 17 ரன்களிலும் தங்களது விக்கெட்டை இழந்தனர். கடைசியில் ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ் இருவர் மட்டும் களத்தில் நிற்க 50 ஓவர்கள் முடிந்தது.

இறுதியில், 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா அணி 311 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக குயின்டன் 109 ரன்களும், மார்க்ராம் 56 ரன்களும் எடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஆஸ்திரேலிய அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் 312 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!

டெல்லி : டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வராக ரேகா குப்தா நியமிக்கப்பட்டு அவரும் பொறுப்பேற்றுக்கொண்டார்.…

40 minutes ago

காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

1 hour ago

நாதகவில் அடுத்த விக்கெட்டா? “நானே விரைவில் சொல்வேன்” – காளியம்மாள் விளக்கம்!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் (நாதக) சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

2 hours ago

ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அனைவருடைய கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்…

4 hours ago

மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!

டெல்லி : புதுடெல்லியில் நடைபெற்ற 98வது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து அதில் பேசிய பிரதமர் மோடி…

4 hours ago

நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி ஒருவர் தனது நண்பருடன் இருந்தபோது ஞானசேகரன் என்பவர்…

4 hours ago