டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், இன்று கடைசி டி-20 போட்டி நடைபெறுகிறது.
கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று ஒருநாள், மூன்று டி-20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகளை கொண்ட டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில் ,தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இன்று கடைசி டி-20 போட்டி சிட்னியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி-20 தொடரை 3-0 கணக்கில் கைப்பற்றும்.ஆனால் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றிபெற போராடும் என்பதில் ஆச்சரியமில்லை.பின்னர் நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்திய அணி வீரர்கள் விவரம் :
ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, ஷர்துல் தாகூர் , வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், முகமது ஷமி, நடராஜன்,சைனி,மயங்க் ,மனிஷ் பாண்டே ,சாகல் ,பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…
பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி முதலில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (மே 20,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகதின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் இன்று மதியம்…