இன்று ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.இதில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் பிரிஸ்பேனில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. 16.1 ஓவரின் போது போட்டி மழையால் நிறுத்தப்பட்டது.மழையால் 17 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் அடித்தது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வேல் 46,லின் 37 , ஸ்டோய்னிஸ் 31 ரன்கள் எடுத்தனர்.இந்திய அணியின் பந்து வீச்சில் குல்தீப் 2, கலீல் அகமது,பூம்ரா தலா 1 விக்கெட் எடுத்தனர்.மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்திய அணிக்கு 174 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனால் இந்திய அணி 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 169 ரன்கள் மட்டுமே அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் மட்டும் 77 ரன்கள் எடுத்தார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .
இந்நிலையில் இன்று 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.போன போட்டியில் செய்த தவறுகளை இந்த போட்டியில் இந்திய வீரர்கள் தவிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதேபோல் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்லும் வாய்ப்பு இந்தியாவிற்கு இருக்கும்.இல்லையெனில் தொடர் இந்தியாவின் கையைவிட்டு சென்றுவிடும்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…