இங்கிலாந்தை திணறடித்த ஆஸ்திரேலியா!! 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Published by
அகில் R

டி20I: டி20 உலகக்கோப்பை தொடரின் 17-வது போட்டியில் ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்து அணியை அபாரமாக வீழ்த்தி தொடரின் 2-வந்து வெற்றியை பதிவு செய்தது.

நடைபெற்று வரும் டி20 போட்டியில் இன்றைய 17-வது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் பார்படாஸ்ஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதினார்கள். இந்த போட்டியானது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு போட்டியாகும்.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்வார்கள். அதன்படி ஆஸ்திரேலியா அணி பேட்டிங் களமிறங்கி விளையாடுவார்கள். களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் 30+ ரன்களுக்கு மிகாமல் ரன்களை எடுத்தனர்.

டிராவிஸ் ஹெட் 18 பந்துக்கு 34 ரன்கள், டேவிட் வார்னர் 16 பந்துக்கு 39 ரன்கள், மிட்செல் மார்ஷ் 35 ரன்கள், ஸ்டோய்னிஸ் 30 ரன்கள் என அனைத்து பேட்ஸ்மேன்களும் இங்கிலாந்து பவுலர்களையும் பதம் பார்த்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது.

அதனை தொடர்ந்து இமாலய இலக்கான 202 ரன்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கியது இங்கிலாந்து அணி. அதன்படி தொடக்கம் முதலே அதிரடி காட்டி வந்தனர் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ஜாஸ் பட்லரும், ஃபிலிப் சாலட்டும். இருவரும் இணைந்து அதிரடி காட்டி, ஆஸ்திரேலியா அணிக்கு பயத்தை காட்டினராகள்.

அதன் பிறகு ஃபிலிப் சால்ட் 37 ரன்களுக்கு, ஜாம்பாவின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து பட்லரும் 42 ரன்களுக்கு அதே ஜாம்பாவின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க போட்டி ஆஸ்திரேலியா அணியின் பக்கம் சரிந்தது. அவரை தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி பொறுமையுடன் அணிக்காக ரன் சேகரித்து வந்தார்.

அவரும் 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியின் கையைவிட்டு போட்டி முற்றிலும் நழுவியது. அதன் பிறகு எந்த ஒரு வீரரும் இங்கிலாந்து அணியில் சரிவர விளையாடாததால், இறுதியில் இங்கிலாந்து அணி  20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஜாம்பா மற்றும் ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இத்தொடரின் 2-வது வெற்றியையும் பதிவு செய்துள்ளது.

Published by
அகில் R

Recent Posts

“ஒரு ரவுடிய அடிச்சா தான், அவன் பெரிய ரவுடி..” விஜய் குறித்து அண்ணாமலை கிண்டல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்த்தில்…

37 minutes ago

17 வருட பகையை தீர்த்து கொண்ட ஆர்சிபி… சேப்பாக்கத்தில் சிஎஸ்கே படுதோல்வி.!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…

8 hours ago

மியான்மர், தாய்லாந்தை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 150 ஆக உயர்வு.!

பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…

9 hours ago

CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!

சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…

10 hours ago

மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…

11 hours ago

CSK vs RCB : ஆர்சிபி-ஐ பழிதீர்க்குமா சென்னை.? டாஸ் வென்ற ருதுராஜ் பந்துவீச தேர்வு.!

சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…

13 hours ago