இந்தியாவின் பயிற்சியாளராக ஆஸ்ரேலியா வீரரா? விளக்கம் கொடுத்த ஜெய் ஷா!

Published by
பால முருகன்

பிசிசிஐ : இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்ரேலியா முன்னாள் வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக வெளியான செய்தி உண்மை இல்லை என ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட் 50 ஓவர்கள் போட்டியில் இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வந்த நிலையில், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு அவருடைய பயிற்சி காலம் முடிந்துவிடும். எனவே, அவருக்கு அடுத்ததாக எந்த வீரர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக யார் வருவார் என்ற கேள்வி எழும்பியது.

இதனையடுத்து, ஒரு செய்தியும் ரொம்பவே வைரலானது. அது என்னவென்றால், ராகுல் ட்ராவிட் பதவிக்காலம் முடிந்த பிறகு, இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய தலைமை பயிற்சியாளரை தேடி வருவதாகவும், இதற்காக ஆஸ்ரேலியா வீரர் ஒருவரை தேர்வு செய்யவும் அதற்காக சில வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் பரவியது.

இந்த தகவலுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றையும் வெளியீட்டு இருக்கிறார். இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது “நானும் , இந்திய அணியின் கிரிக்கெட் வாரியமோ, இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய எந்த ஒரு ஆஸ்ரேலியா வீரரையும் அணுகவில்லை. அப்படி அணுகியதாக பரவும் தகவல் எல்லாம் உண்மையில்லாத ஒன்று. எனவே, யாரும் இது போன்ற செய்தியை நம்பவேண்டாம்.

இந்திய அணிக்கு பயிற்சியாளரை தேர்வு செய்வது என்பது முக்கியமான வேளைகளில் ஒன்று. இந்திய அணியை பற்றி முழுவதுமாக தெரிந்த்து கொண்ட ஒருவரால் மட்டும் தான் பயிற்சியாளராக இருந்தால் சரியாக இருக்கும். எனவே, வதந்தி செய்திகளை நம்பவேண்டாம் இந்திய அணியை முன்னோக்கி எடுத்து செல்லக்கூடிய ஒரு அருமையான பயிற்சியாளரை  பிசிசிஐ தேர்ந்தெடுக்கும்” பிசிசிஐயின் அதிநவீன உள்ளகப் பயிற்சி வசதிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கூறி இருந்தார்.

Published by
பால முருகன்

Recent Posts

தமிழகத்தில் (08-10-2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…

27 mins ago

மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா! நடுவானிலே இடைமறித்து தாக்கிய இஸ்ரேல்!

ஹைஃபா : கடந்த 2023-ம் ஆண்டு இதே நாளில் (அக்-7) ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் புகுந்து கொடூர தாக்குதலை மேற்கொண்டனர்.…

33 mins ago

நவராத்திரி ஆறாம் நாள்.. சண்டிகா தேவியை வழிபாடும் முறை .!

சென்னை-நவராத்திரி ஆறாம் நாளில் அம்பிகையின் ஸ்ரூபம், வழிபாட்டிற்கு உரிய மலர் மற்றும் நெய்வேத்தியங்களை பற்றி இந்த ஆன்மீக குறிப்பின் மூலம்…

42 mins ago

WWT20 : இந்திய மகளிர் அணி படைத்த புதிய ரெகார்ட்! அரை இறுதிக்கும் இதுதான் ஒரே வழி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் மோதியது. விறுவிறுப்பாக…

1 hour ago

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம்.! மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!

சென்னை : தமிழகத்தில் கிராமப்புற மக்கள் பயன்பெரும் நோக்கில் அவர்களின் இல்லங்களுக்கே சென்று தொற்றா நோய்களான இரத்த அழுத்தம், நீரிழிவு…

1 hour ago

`மைக்ரோ RNA..’ மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.!

டெல்லி : 2024-ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில் நோபல் பேரவை,…

1 hour ago