இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில் ஜடேஜா 4, பும்ரா நவ்தீப் சைனி தலா 2, முகமது சிராஜ் 1 விக்கெட்டை பறித்தனர். பின்னர், இறங்கிய இந்திய அணி நேற்றைய இரண்டாம்நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 45 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 96 ரன்கள் எடுத்தனர். இன்று 3-ம் நாள் ஆட்டம் தொடங்கிய இந்திய அணி 100.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 244 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில் ஹனுமா விஹாரி, அஸ்வின் மற்றும் பும்ரா ஆகியோர் ரன் அவுட் செய்யப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ் 4, ஹேசில்வுட் 3, ஸ்டார்க் 1 விக்கெட்டை பறித்தனர். இதன் காரணமாக 94 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக இறங்கிய டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி இறங்கினர். இவர்கள் இருவரும் வந்த வேகத்தில் டேவிட் வார்னர் 13, வில் புகோவ்ஸ்கி 10 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். பின் இறங்கிய மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித் இருவரும் நிதானமாக விளையாடிய ரன்கள் சேர்த்தனர்.
3-ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 29 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 103 ரன்கள் எடுத்தனர். இதனால், 197 ரன்கள் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது இந்திய அணியில் முகமது சிராஜ், அஸ்வின் இருவரும் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…