இங்கிலாந்தை வீழ்த்தி மகளிர் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா

Published by
murugan

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி 5 விக்கெட்டுக்கு 356 ரன்கள் குவித்தது. மகளிர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இதுவரை அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஆஸ்திரேலியா அணியில் அலிசா ஹீலி 138 பந்துகளில் 26 பவுண்டரிகளை விளாசி 170 ரன்கள் குவித்தார். 62 பந்துகளில் அரை சதத்தை அடித்த ஹீலி அடுத்த 38 பந்துகளில் சதம் விளாசினார்.

ஹீலி 170 ரன்கள் எடுத்ததன் மூலம் மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில்  தனிநபர் ஒருவர் அதிகபட்சமாக அடித்த ரன் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2005-ஆம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 105 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியாவின் கரேன் ரோல்டனின் சாதனை முறியடித்தார்.

ஹீலி தொடர்ச்சியாக இரண்டாவது சதம் அடித்துள்ளார். அரையிறுதி போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 129 ரன்கள் அடித்தார். ஹீலி தனது சதத்தின் மூலம் உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். ஆஸ்திரேலிய அணியில் ஹீலியைத் தவிர ரேச்சல் ஹெய்ன்ஸ் (68), பெத் மூனி (62) ரன்கள் எடுத்தனர்.

பின்னர் 357 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 43.4 ஓவர்களில் 285 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 71 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.  இங்கிலாந்துக்காக நடாலி சிவர் சதம் அடித்தார். நடாலி சிவர் 121 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என மொத்தம் 148 ரன்கள் குவித்தார்.  ஆஸ்திரேலியா சார்பில் அலனா கிங் மற்றும் ஜெஸ் ஜான்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மேகன் ஸ்காட் 2 விக்கெட்டுகளையும், தாலியா மெக்ராத் மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Published by
murugan

Recent Posts

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

32 mins ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

58 mins ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

2 hours ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

3 hours ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

3 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

3 hours ago