கிரிக்கெட்

பந்துவீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலியா… 240 ரன்களுக்கு இந்திய அணி ஆல்அவுட்.!

Published by
மணிகண்டன்

இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் குஜராத், அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கிற்கு களமிறங்கினர்.

முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் கேப்டன் ரோகித் சர்மா நல்ல தொடக்கத்தை அளிக்க நினைத்தனர். ஆனால், சுப்மன் கில் 4 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்து வந்த விராட் கோலி , கேப்டன் ரோகித் சர்மா உடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தார். பின்னர் ரோகித் சர்மா 47 ரன்கள் இருக்கும்போது மேக்ஸ்வெல் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

அதன் பிறகு களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் வெளியேற இந்திய அணியின் ரன்வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பிறகு விராட் கோலி 54 ரன்களில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் 66 ரன்கள் எடுத்த ஸ்டார்க் ஓவரில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜடேஜாவும் 9 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

அதன் பிறகு களம் இறங்கிய முகமது சாமி 6 ரன்கள் எடுத்திருக்கையில் பெரிய ஷார்ட் அடிக்க நினைத்து அவுட் ஆனார். சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் அவுட் ஆகினார். முகமது சிராஜ் 9 ரன்கள் எடுத்திருக்க குல்தீப் யாதவ் 10 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் அவுட் ஆக, 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் எடுத்திருந்தனர்.

50 ஓவரில் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி அடுத்து களமிறங்க உள்ளது.

ஆஸ்திரேலியா அணி சார்பாக ஸ்டார்க் 10 ஓவர் வீசி 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் எடுத்து இருந்தார். கேப்டன் பேட் கம்மின்ஸ் 10 ஓவரில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் எடுத்து இருந்தார். ஆடம் சாம்பா 10 ஓவர் வீசி 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்து இருந்தார். ஹஸீல்வுட்  10 ஓவரில் 60ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் எடுத்து இருந்தார். ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் 6 ஓவர் வீசி 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கச்சத்தீவை மத்திய அரசு மீட்கக் கோரிய தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு.!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

1 minute ago

‘திமுக கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம்’ ஆ.ராசாவின் பேச்சுக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…

24 minutes ago

அஸ்வினை நிறுத்துங்க..திரிபாதியை தூக்குங்க! சென்னைக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அட்வைஸ்!

சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

28 minutes ago

இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம்! கச்சத்தீவு தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் பேச்சு!

சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

1 hour ago

நான் வீழ்வேன் என நினைத்தாயோ? திடீரென என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா.!

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

2 hours ago

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் – பிரதமர் மோடியை சந்திக்க ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…

3 hours ago