கிரிக்கெட்

பந்துவீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலியா… 240 ரன்களுக்கு இந்திய அணி ஆல்அவுட்.!

Published by
மணிகண்டன்

இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் குஜராத், அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கிற்கு களமிறங்கினர்.

முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் கேப்டன் ரோகித் சர்மா நல்ல தொடக்கத்தை அளிக்க நினைத்தனர். ஆனால், சுப்மன் கில் 4 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்து வந்த விராட் கோலி , கேப்டன் ரோகித் சர்மா உடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தார். பின்னர் ரோகித் சர்மா 47 ரன்கள் இருக்கும்போது மேக்ஸ்வெல் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

அதன் பிறகு களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் வெளியேற இந்திய அணியின் ரன்வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பிறகு விராட் கோலி 54 ரன்களில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் 66 ரன்கள் எடுத்த ஸ்டார்க் ஓவரில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜடேஜாவும் 9 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

அதன் பிறகு களம் இறங்கிய முகமது சாமி 6 ரன்கள் எடுத்திருக்கையில் பெரிய ஷார்ட் அடிக்க நினைத்து அவுட் ஆனார். சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் அவுட் ஆகினார். முகமது சிராஜ் 9 ரன்கள் எடுத்திருக்க குல்தீப் யாதவ் 10 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் அவுட் ஆக, 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் எடுத்திருந்தனர்.

50 ஓவரில் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி அடுத்து களமிறங்க உள்ளது.

ஆஸ்திரேலியா அணி சார்பாக ஸ்டார்க் 10 ஓவர் வீசி 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் எடுத்து இருந்தார். கேப்டன் பேட் கம்மின்ஸ் 10 ஓவரில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் எடுத்து இருந்தார். ஆடம் சாம்பா 10 ஓவர் வீசி 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்து இருந்தார். ஹஸீல்வுட்  10 ஓவரில் 60ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் எடுத்து இருந்தார். ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் 6 ஓவர் வீசி 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

6 minutes ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

18 minutes ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

24 minutes ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

2 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

3 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

4 hours ago