“சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்லும்” மெஸ்ஸியின் ஜாதகத்துடன் ரோஹித் ஜாதகத்தை ஒப்பிட்டு கணித்த ஜோதிடர்.!
ரோஹித்தின் ஜாதகத்தை கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் ஜாதகத்துடன் ஒப்பிட்டு, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார்.

டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நாளை மறுநாள் (மார்ச் 9) துபாயில் நடைபெறும் இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் என்று ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்று குழு A இல் முதலிடத்தைப் பிடித்த இந்தியா, அரையிறுதியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கள் வெற்றிப் பயணத்தை நான்கு போட்டிகளாக மாற்றி தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. எட்டு அணிகள் கொண்ட சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா தோற்கடிக்கப்படாத ஒரே அணியாக உள்ளது. இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், இந்தியா இப்போது சாம்பியன்ஸ் பட்டத்தை பெற ஒரு வெற்றி மட்டுமே உள்ளது.
இந்த நிலையில், இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ என்பவர் ஒரு துணிச்சலான கணிப்பைச் செய்திருக்கிறார். அதாவது, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, வருகின்ற ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச மைதானத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் என்று கூறியுள்ளார். டைம்ஆஃப் இந்தியா உடன் பேசிய ஜோதிடர் லோபோ, ரோஹித் சர்மாவின் ஜாதகம் கால்பந்தில் லியோனல் மெஸ்ஸியின் ஜாதகத்தைப் போலவே இருப்பதாக நான் எப்போதும் கூறி வருகிறேன். இருவரும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள், கிரக அமைப்புகளும் ஒரே மாதிரியாக உள்ளன.
பார்சிலோனாவுக்காக கேப்டனாக எதையும் வெல்லாத மெஸ்ஸி, ஒரு கேப்டனாக உலகக் கோப்பையை வென்றார். இதேபோல், மெஸ்ஸி இரண்டு கோபா அமெரிக்கா பட்டங்களையும் வென்றார். இதை ஜோதிட ரீதியாக பார்க்கையில், ரோஹித் சர்மாவுக்கு இன்னும் குறிப்பிடத்தக்க கர்ம வினை மீதமுள்ளதை நீங்கள் காணலாம். அவர் ஏற்கனவே டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளார், மேலும் அவரது ஜாதகம் மற்றொரு ஐசிசி போட்டியை வெல்லும் அளவுக்கு சக்தி கொண்டுள்ளது.
50 ஓவர் உலகக் கோப்பையுடன் ஒப்பிடும்போது, சாம்பியன்ஸ் டிராபி குறைவான முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் அதை வெல்ல அவருக்கு இன்னும் கிரக பலம் உள்ளது. இப்போது, இந்தியாவின் எதிரணியான நியூசிலாந்தைப் பார்ப்போம். ரோஹித் சர்மாவின் ஜாதகத்தை வைத்து பார்க்கையில், ஒரு பலவீனமான புளூட்டோ உள்ளது. ஒரு ஜாதகத்தில் பலவீனமான புளூட்டோ இருந்தால், முக்கியமான தருணங்களில் தடைகளை உண்டாக்கக்கூடும்.
அப்படித்தான், 2023 உலகக் கோப்பையில், அவர் வலுவான புளூட்டோவைக் கொண்டிருந்ததால் ஆஸ்திரேலியா அணியிடம் தோற்றார். இப்படி இருக்கையில், இந்தியாவுக்கு ஒரு நன்மை கிடைக்க உள்ளது, அதாவது”1992 மற்றும் 1994 க்கு இடையில் பிறந்த கே.எல். ராகுல், ஹார்டிக் பாண்ட்யா, அக்சர் படேல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய ஐந்து முக்கிய வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர். நெப்டியூன் ஆழ்ந்த உயர்நிலையிலும், புளூட்டோ பூஜ்ஜிய டிகிரியிலும் உள்ளது.
இதற்கிடையில், நியூசிலாந்தில் 1991 மற்றும் 1992 க்கு இடையில் பிறந்த ஆறு வீரர்கள் உள்ளனர்.அவர்களின் ஜாதகத்தில் பலவீனமான x கிரகம் உள்ளது. ஆனால், அவர்களிடம் 1997 இல் பிறந்த வீரர்களும் இல்லை, அதே நேரத்தில் இந்தியாவில் ஷுப்மான் கில் உட்பட சிலர் உள்ளனர். மற்றொரு பக்கம், 1986 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் பிறந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா, நெப்டியூன் மற்றும் யுரேனஸை தங்கள் வலுவான நிலைகளில் கொண்டுள்ளனர். இதற்கு நேர்மாறாக, நியூசிலாந்தில் 1980களில் பிறந்த இதே போன்ற கிரக பலம் கொண்ட வீரர்கள் யாரும் இல்லை. இதன் பொருள், ஒவ்வொரு நியூசிலாந்து வீரருக்கு எதிராக இந்தியாவுக்கு வலுவான ஜாதகம் கொண்டுள்ளது.
இந்நிலையில், ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் அனைத்து அறிகுறிகளும் சுட்டிக்காட்டுகின்றன. முன்னதாக, அவரது ஜாதகம் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருந்தது, ஆனால் அவர் அந்த வாய்ப்பை தவறவிட்டதால், கர்மா மற்றும் கிரக சீரமைப்பு அவருக்கு இரண்டு ஐசிசி கோப்பைகளை வழங்குவதன் மூலம் ஈடுசெய்யும். அவர் ஏற்கனவே ஒன்றை (டி20 உலகக் கோப்பை) வென்றுள்ளார், இப்போது, அவர் சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் விதி உள்ளது” என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025