வங்க தேசத்தில் நடைபெறும் ஆசியக்கோப்பை மகளிர் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.
நடந்து முடிந்த ஆசியக்கோப்பை ஆடவருக்கான தொடரில் இந்திய அணி, சூப்பர் 4 சுற்றுலேயே வெளியேறியது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய இறுதி போட்டியில், இலங்கை அணி பாகிஸ்தானை தோற்கடித்து 2022-ஆம் ஆண்டுக்கான ஆசியக்கோப்பையை வென்றது. தற்போது, 7 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 1 முதல் 15 வரை வங்கதேசத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றனர். இந்த நிலையில், ஆசிய கோப்பை மகளிர் தொடரில் பங்கேற்கும் இந்திய பெண்கள் அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. இந்திய அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 1-ஆம் தேதி இலங்கைக்கு எதிராக விளையாடுகிறது. அக்டோபர் 7-ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி ஷர்மா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சபினேனி மேகனா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, தயாளன் ஹேமலதா, மேக்னா சிங், ரேணுகா தாகூர், ராஜேஸ்வரி வஸ்த்ரகர், பூஜா வஸ்த்ரகர் கெய்க்வாட், ராதா யாதவ், கே.பி. நவ்கிரே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
காத்திருப்பு வீரர்கள்: தனியா சப்னா பாட்டியா, சிம்ரன் தில் பகதூர்.
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…