அஸ்வின் சாதனை: முதல் பந்தில் விக்கெட்., 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அபாரம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய, முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் ரவிச்சந்திர அஸ்வின்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. 4வது நாளான இன்று 2வது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 419 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதில் கடந்த 114 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய, முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இரண்டாவது இன்னிங்சில் முதல் பந்தில் இங்கிலாந்து வீரர் பர்னஸ் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். மேலும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். முதல் டெஸ்ட் போட்டியை பொறுத்தளவில் அஸ்வின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 419 ரன்கள் இலக்குடன் 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி நான்காவது நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்து சுப்மான் கில் மற்றும் புஜாரா களத்தில் உள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

34 seconds ago

அறிவில்லாமல் இதை செய்யாதீங்க! டென்ஷனாகி இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…

1 hour ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு!

டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

2 hours ago

வெடித்த சர்ச்சை : ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்! நடந்தது என்ன?

கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…

2 hours ago

“ஜூன் 4-ல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் கீதாஜீவன் சொன்ன முக்கிய தகவல்!

தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…

3 hours ago

“தலை துண்டிக்கப்படும்., விரைவில் இரங்கல் செய்தி வரும்?” சீமானுக்கு கொலை மிரட்டல்!

சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…

3 hours ago