ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வீரர் அஸ்வின், போட்டியின்போது மறுமுனையில் இருந்த விகாரியிடம் தமிழில் பேசினார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, இன்று நடந்த 3 ஆம் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெறும் அளவில் இருந்த நிலையில், அவர்களின் வெற்றிக்கனவை இந்திய அணி பறித்து, டிரா செய்ததால், 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது.
இந்தநிலையில், இந்த போட்டியின் பொது தமிழக வீரர் அஸ்வின், மறுமுனையில் இருந்த விஹாரியிடம் தமிழில் பேசினார். ஆந்திராவை சேர்ந்த விஹாரிக்கு தமிழ் தெரியும் என்பதால் அஸ்வின், அவரிடம் முழுவதுமாக தமிழில் பேசினார். மேலும் விகாரிக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு முழுவதுமாக ஊக்கமளித்தார். குறிப்பாக, “மாமா.. ஆடு மாமா”, “பத்து பத்து பால் விளையாண்டா 40 பால் ஆடலாம்” என அஸ்வின் பேசியது, தற்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.
அதுமட்டுன்றி, ஒவ்வொரு பந்திற்கும் முன் பவுலர்களை கணித அஸ்வின், விஹாரிக்கு தமிழில் இப்படி போடப்போறார் என தெரிவித்தார். அதில், “உள்ள வர வைக்குறாங்க, கவலப்படாத” “பால் ஸ்ட்ரெயிட்-ஆ தான் வரும் ” போன்ற வார்த்தைகளை கூறினார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…