ஐசிசி-யின் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை இந்திய அணியின் அதிரடி வீரர் அஸ்வின்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் தமிழக வீரர் அஸ்வின், பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு துறைகளிலும் அசத்தினார். இந்த தொடரில் அஸ்வின், 24 விக்கெட்களை வீழ்த்தியதுடன், 176 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் 77 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய அஸ்வின், 400 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். அவரின் 400-வது விக்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சராகும். இந்தநிலையில், ஐசிசி மாதந்தோறும் சிறந்த வீரர் தேர்ந்தெடுத்து, அவர்களை கவுரவிக்கும். அந்தவகையில், முதல் முதலாக ஜனவரி மாதம் இந்த விருதை வழங்கியது.
அந்த விருதை ரிஷப் பண்ட் கைப்பற்றினார். அதனைதொடர்ந்து, பிப்ரவரி மாதத்திற்கான விருதை தமிழக வீரர் அஸ்வின் கைப்பற்றினார். மேலும், ஐசிசி இந்த விருதை அறிமுகப்படுத்தி 2 மாதங்களே ஆன நிலையில், இரண்டு மாதங்களும் இந்திய வீரர்களே இந்த விருதுகளை கைப்பற்றியது, குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…