ஆஸ்திரேலிய வீரர் ஸ்காட் போலண்ட் வெறும் 4 ஓவர் வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டை பறித்தார்.
இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையே 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இப்போட்டியில் முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி 65.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 185 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதையடுத்து முதல் நாள் ஆட்டத்தில் மீதம் இருந்த நேரத்தில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.
இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட்டை இழந்து 16 ஓவரில் 61 ரன்கள் எடுத்தது. நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்ற நிலையில், ஆஸ்திரேலிய அணி 87.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 267 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.இதையடுத்து, மீதமிருந்த நேரத்தில் 82 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்க்ஸை தொடங்கி விளையாடிய நிலையில் நேற்றைய 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று 3-ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடக்கியதும் தொடர்ந்து விக்கெட் பறிபோனதால் இங்கிலாந்து அணி 27.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 68 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது.
இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி கோப்பையை தக்க வைக்க ஸ்காட் போலண்ட் பந்து வீச்சு பெரிதும் உதவியது. காரணம் ஆஸ்திரேலிய வீரர் ஸ்காட் போலண்ட் வெறும் 4 ஓவர் வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டை பறித்தார். மேலும், 4 ஓவரில் ஒரு ஓவர் மெய்டன் செய்துள்ளார். இதனால், ஸ்காட் போலண்ட்-க்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…