ஆஸ்திரேலிய வீரர் ஸ்காட் போலண்ட் வெறும் 4 ஓவர் வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டை பறித்தார்.
இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையே 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இப்போட்டியில் முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி 65.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 185 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதையடுத்து முதல் நாள் ஆட்டத்தில் மீதம் இருந்த நேரத்தில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.
இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட்டை இழந்து 16 ஓவரில் 61 ரன்கள் எடுத்தது. நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்ற நிலையில், ஆஸ்திரேலிய அணி 87.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 267 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.இதையடுத்து, மீதமிருந்த நேரத்தில் 82 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்க்ஸை தொடங்கி விளையாடிய நிலையில் நேற்றைய 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று 3-ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடக்கியதும் தொடர்ந்து விக்கெட் பறிபோனதால் இங்கிலாந்து அணி 27.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 68 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது.
இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி கோப்பையை தக்க வைக்க ஸ்காட் போலண்ட் பந்து வீச்சு பெரிதும் உதவியது. காரணம் ஆஸ்திரேலிய வீரர் ஸ்காட் போலண்ட் வெறும் 4 ஓவர் வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டை பறித்தார். மேலும், 4 ஓவரில் ஒரு ஓவர் மெய்டன் செய்துள்ளார். இதனால், ஸ்காட் போலண்ட்-க்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…