ஆஷஸ் தொடரின் 3-வது போட்டி நாளை மெல்போர்ன் மைதானத்தில் அதிகாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே 2 போட்டிகள் முடிந்துள்ளது. அதில், ஆஸ்திரேலியா அணி 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 275 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், 3-வது போட்டி நாளை மெல்போர்ன் மைதானத்தில் அதிகாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை மீண்டும் தங்கள் வசம் வைத்துக்கொள்ள ஆஸ்திரேலியாவும், கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்ற கூடாது என்ற முனைப்புடன் இங்கிலாந்து அணி விளையாட உள்ளனர்.
ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். ஹேசல்வுட் காயம் காரணமாக இந்த போட்டியிலும் விளையாடவில்லை. இங்கிலாந்து அணியில் பர்ன்ஸ், பிராட், ஒல்லிபோப் ஆகியோருக்கு பதிலாக பேர்ஸ்டோவ், ஜாக்லீச், மார்க்வுட் களமிறங்கவுள்ளனர்.
2019-ல் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. 2017-18 ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றதால் ஆஷஸ் கோப்பை அவர்களிடம் உள்ளது. இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33-ல் ஆஸ்திரேலியாவும், 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன.
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…