டி-20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம் பெற்றுள்ள நிலையில்,ரசிகர்களின் அற்புதமான ட்வீட்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தியாவில் நடைபெறவிருந்த டி-20 உலகக் கோப்பை கொரோனா காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. டி-20 உலகக் கோப்பை போட்டியானது அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14 ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்நிலையில், டி-20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரித்து ஐசிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2-வது குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குரூப்பில் இடம் பெற்றுள்ளதால் இதுகுறித்து கிண்டலடிக்கும் வகையில் கிரிக்கெட் ரசிகர்கள் மீம்ஸ்களை ட்வீட்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.மேலும்,இவை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இரு அணிகளும் கடைசியாக மோதியது எப்போது?
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதியன்று நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன.இதில் இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…