Arshdeep singh [file image]
அர்ஷதீப் சிங்: டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று இந்திய அணி, அமெரிக்க அணியை தோற்கடிக்க முக்கிய காரணமாக அமைந்த அர்சதீப் சிங் புதிய சாதனையை படைத்ததுடன், போட்டி முடிந்த பிறகு பேசி இருக்கிறார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி நேற்று விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தனர். அதனால் பேட்டிங் வந்த அமெரிக்கா அணியின் தொடக்க வீரர்கள், அர்ஷதீப் சிங் பந்து வீச்சில் சிக்கி வெளியேறினார்கள். அவர் வீசிய முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
மேலும், 4 ஓவர்கள் பந்து வீசிய அவர் 9 ரன்களை விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பையில் சிறப்பான பந்து வீச்சை வீசிய பட்டியலில் அஸ்வினை தாண்டி முதலிடத்தில் தனது பெயரை பதிவு செய்து இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். இந்த போட்டி முடிந்த பிறகு அர்ஷதீப் சிங் இந்த போட்டியில் விளையாடியதை குறித்து பேசி இருந்தார்.
அவர் கூறுகையில், “இந்த போட்டியில் எனது பந்து வீச்சை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால், கடந்த 2 போட்டிகளில், நான் பந்து வீச்சில் கூடுதலாக சில ரன்களை விட்டுக் கொடுத்தேன். அதனால் நான் கொஞ்சம் கூட நிம்மதியில்லாமலே இருந்தேன். ஆனால், என் அணி நிர்வாகமும், என் அணி கேப்டனும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த போட்டிக்கு வாய்ப்பு கொடுத்தனர்.
அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த நியூயார்க் பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல உதவியாக இருந்தது.அதனை பயன்படுத்தி நன்றாக பந்து வீசினேன். எங்களின் திட்டமும் சாதாரணமாக வைத்திருந்தோம். பிட்சில் சரியான இடத்தில் பந்தை வீசினாலே போதும், மற்ற அனைத்தையும் பிட்ச் செய்துவிடும் என்று திட்டமிட்டோம்.
அதனால் நல்ல பந்தை வீச வேண்டும் என்பதே எனது திட்டமாக இருந்தது. இதுபோன்ற பிட்ச்களில் தான், அங்கு நிலவும் சூழலையும் பயன்படுத்தி விளையாட வேண்டும்”, என்று கூறி இருந்தார்.
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…