அர்ஷதீப் சிங்: டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று இந்திய அணி, அமெரிக்க அணியை தோற்கடிக்க முக்கிய காரணமாக அமைந்த அர்சதீப் சிங் புதிய சாதனையை படைத்ததுடன், போட்டி முடிந்த பிறகு பேசி இருக்கிறார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி நேற்று விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தனர். அதனால் பேட்டிங் வந்த அமெரிக்கா அணியின் தொடக்க வீரர்கள், அர்ஷதீப் சிங் பந்து வீச்சில் சிக்கி வெளியேறினார்கள். அவர் வீசிய முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
மேலும், 4 ஓவர்கள் பந்து வீசிய அவர் 9 ரன்களை விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பையில் சிறப்பான பந்து வீச்சை வீசிய பட்டியலில் அஸ்வினை தாண்டி முதலிடத்தில் தனது பெயரை பதிவு செய்து இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். இந்த போட்டி முடிந்த பிறகு அர்ஷதீப் சிங் இந்த போட்டியில் விளையாடியதை குறித்து பேசி இருந்தார்.
அவர் கூறுகையில், “இந்த போட்டியில் எனது பந்து வீச்சை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால், கடந்த 2 போட்டிகளில், நான் பந்து வீச்சில் கூடுதலாக சில ரன்களை விட்டுக் கொடுத்தேன். அதனால் நான் கொஞ்சம் கூட நிம்மதியில்லாமலே இருந்தேன். ஆனால், என் அணி நிர்வாகமும், என் அணி கேப்டனும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த போட்டிக்கு வாய்ப்பு கொடுத்தனர்.
அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த நியூயார்க் பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல உதவியாக இருந்தது.அதனை பயன்படுத்தி நன்றாக பந்து வீசினேன். எங்களின் திட்டமும் சாதாரணமாக வைத்திருந்தோம். பிட்சில் சரியான இடத்தில் பந்தை வீசினாலே போதும், மற்ற அனைத்தையும் பிட்ச் செய்துவிடும் என்று திட்டமிட்டோம்.
அதனால் நல்ல பந்தை வீச வேண்டும் என்பதே எனது திட்டமாக இருந்தது. இதுபோன்ற பிட்ச்களில் தான், அங்கு நிலவும் சூழலையும் பயன்படுத்தி விளையாட வேண்டும்”, என்று கூறி இருந்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…